செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறு படை வீடுகளை (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி & பழமுதிர்ச்சோலை) பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந் நூலை இயற்றியவர் நக்கீரனார்.
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு இரண்டு வகை. இந்த பத்துப்பாட்டு தொகுப்பில் முதல் நூல் திருமுருகாற்றுப்படை இந்த நூல் இயற்றப்பட்ட காலம் 300 BCE to 300 CE (BCE - Before Common Era, CE-Common Era, now running Common era 2020)
முருகனின் 6 படை வீடுகளும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்பது தெளிவு. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மொழி தமிழ் மொழி! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய கடவுள் நம் கந்த கடவுள்.
அது என்ன கல் தோன்றி மண் தோன்றா காலம்?
இந்த பூமியானது முழுவதும் நீரால் சூழப்பட்டது முதலில், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீர் வடிந்து முதலில் மலைகளும் பின் மலையடிவாரங்களும் தென்பட ஆரம்பித்த காலம் அந்த சமயத்திலே தோன்றிய குடி தமிழ் குடி, அந்த சமயத்திலே மக்கள் வழிபட்ட தெய்வம் முருகன்.
அதனால்தான் இந்த பழமொழி "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மொழி தமிழ் மொழி! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய கடவுள் நம் கந்த கடவுள்".
இந்த நூலின் பயன் என்னவென்றால் முருகனின் அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறதுஅல்லது வழிகாட்டுகிறது
"நக்கீரர்தாம் உரைத்தநல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல, நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து, மனக்கவலை தீர்த்தருளி
தான் நினைத்த எல்லாம் தரும்".
திருமுருகாற்றுப்படை
1. E Book (PDF), Language Tamil
2. Video with Lyrics (mp4) , Sung by the great Bombay Sisters
3. To Listen Audio (mp3), Sung by the great Bombay Sisters
4. Combo (PDF / mp3 / mp4) all together.
MAY LORD SUBRAMANYA BLESS YOU!!!
No comments:
Post a Comment